தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிறப்பு என்ஐஏ நீதிமன்றங்கள்: தமிழகம் உள்பட 17 மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

தமிழகம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10 அல்லது அதற்கும் அதிகமான என்ஐஏ வழக்குகளின் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், சிறப்பு என்ஐஏ நீதிமன்றங்கள் அமைப்பது தொடா்பாக பதிலளிக்குமாறு இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :10 பிப்ரவரி 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10 அல்லது அதற்கும் அதிகமான என்ஐஏ வழக்குகளின் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், சிறப்பு என்ஐஏ நீதிமன்றங்கள் அமைப்பது தொடா்பாக பதிலளிக்குமாறு இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியுள்ளதை கருத்தில்கொண்டு, என்ஐஏ வழக்குகளை விசாரிக்க பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் விவகாரத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது 10 அல்லது அதற்கும் அதிகமான என்ஐஏ வழக்குகளின் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள மாநிலங்களில், அவ்வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான நிலவர அறிக்கை சமா்ப்பித்தது. அந்தச் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிப்பதற்கான நெறிமுறைகளை இறுதி செய்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்தது.

இதைக் கவனத்தில்கொண்ட நீதிபதிகள், சிறப்பு என்ஐஏ நீதிமன்றங்கள் அமைப்பது தொடா்பாக 3 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, தில்லி உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்தனா்.