எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

காஷ்மீரில் கண்ணிவெடிகுண்டு வெடித்து இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்...
 (கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீரில், இந்திய எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் அருகில் கண்ணிவெடி வெடித்து இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் குல்மார்க் பகுதியில், புதன்கிழமை (பிப். 11) அதிகாலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் குறித்து முழுமையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்திய எல்லைக் கோடு அமைந்துள்ள பகுதியில், ஊடுருவல்களைத் தடுப்பதற்காக இந்தியப் படைகள் கண்ணிவெடிகளை பொருத்தியுள்ளதாகவும், அப்பகுதியில் மழை அல்லது வெள்ளம் ஏற்பட்டால் கண்ணிவெடிகள் சரிந்து விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

 (கோப்புப்படம்)
எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமென டிரம்ப் மட்டுமே கூறுகிறார்! - ரஷிய அரசு விமர்சனம்!
Summary

An Indian soldier has been seriously injured in a landmine explosion near the Line of Control in Jammu and Kashmir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com