எங்களுக்கு நீதி வேண்டும்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

மக்களவையில் நீதிகோரி முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
மக்களவை
மக்களவைபிடிஐ
Updated on
1 min read

மக்களவையில் முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் இன்று பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும், எங்களுக்கு நீதி வேண்டும் என்ற முழக்கத்துடன் அவையைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்கேற்ற நிலையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவார் என்று கூறப்படுகிறது.

மேலும், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் குறித்த அறிவிப்பு, பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டத்தில் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அறைக்குள் சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்வகையில் பேசியதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மக்களவை
ஓம் பிர்லா அறைக்குச் சென்று காங்கிரஸ் எம்.பி.க்கள் அச்சுறுத்தல்: கிரண் ரிஜிஜு
Summary

Opposition members shout slogans, walk out of Lok Sabha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com