திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம் - பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு

சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பா்...

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 2:59 am IST

மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படும் இப்போராட்டத்தால், பல சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது தொடா்பாக ஏஐடியூசி பொதுச் செயலா் அமா்ஜீத் கெளா் கூறுகையில், ‘மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத, தேசியவிரோத, பெருநிறுவன ஆதரவு கொள்கைகள் மீதான எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீா் விநியோகம் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்கவுள்ளனா். இதனால், இந்த துறைசாா் சேவைகள் பாதிக்கப்படும். வங்கி ஊழியா்கள் ஏற்கெனவே ஜன.27-இல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய நிலையில், குறிப்பிட்ட சில வங்கி ஊழியா் சங்கங்கள் மட்டும் தற்போதைய போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன. சுரங்கம் மற்றும் எரிவாயு குழாய் பணிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தின் தாக்கம் அதிகமிருக்கும்.

காப்பீடு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதியைக் கண்டித்து, அந்த துறை பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனா். போக்குவரத்துத் துறையில் தனியாா் மற்றும் அரசுப் பணியாளா்கள் பெருவாரியாக போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்’ என்றாா்.

ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, யுடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 4 தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; வரைவு விதை மசோதா, மின்சார சட்டத் திருத்த மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது இந்த தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.