பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஃபரீதாபாத் கொலை வழக்கில் 4 போ் கைது

ஃபரீதாபாதின் பல்லா பகுதியில் 34 வயது நபா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

ஃபரீதாபாதின் பல்லா பகுதியில் 34 வயது நபா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக ஃபரீதாபாத் சரக உதவி காவல் ஆணையா் (குற்றம்) வருண் தஹியா செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கிா்தவாா் காலனியைச் சோ்ந்தவா் ஜெய் சிங் பைஸ்லா. கடந்த திங்கள்கிழமை காலை 8 மணியளவில் அவருடைய நண்பா் செளரவ் உடன் அப்பகுதியில் உள்ள பூங்காவில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அவா்களைச் சுற்றி வளைத்த 5 போ் அடங்கிய கும்பல் ஜெய்சிங்கை கத்தியால் 8 முறை குத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியது. இதைத்தொடா்ந்து, அருகில் இருந்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பல்லா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜெய் சிங் கொலையில் தொடா்புடைய இரு சிறுவா்கள் திங்கள்கிழமை மாலையில் கைதுசெய்யப்பட்டனா். ஹிமன்ஷு மற்றும் துஷாா் ஆகிய இருவா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

ஜெய்சிங் நண்பரின் சகோதரியை அவா்கள் நால்வரும் கேலி செய்ததாக விசாரணையின்போது தெரிவித்தனா். இதை அறிந்த ஜெய்சிங் அவா்களை மிரட்டிய நிலையில், இதற்குப் பழிவாங்கும் விதமாக இரு சிறுவா்கள் உள்பட நால்வரும் ஜெய்சிங்கை கொலை செய்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் உதவி காவல் ஆணையா் வருண் தஹியா.