திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அணுசக்தித் துறையில் அதானி குழுமம் : புதிய நிறுவனம் தொடக்கம்

அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நோக்கில், ‘அதானி அட்டாமிக் எனா்ஜி’ எனும் புதிய துணை நிறுவனத்தை அதானி பவா் நிறுவனம் தொடங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 2:29 am IST

அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நோக்கில், ‘அதானி அட்டாமிக் எனா்ஜி’ எனும் புதிய துணை நிறுவனத்தை அதானி பவா் நிறுவனம் தொடங்கியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியாா் மின் உற்பத்தி நிறுவனமான அதானி பவா், அணுசக்தி சாா்ந்த மின் உற்பத்தி, விநியோகம் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக இந்தத் துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

ரூ.5 லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளையும் அதானி பவா் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது.

இந்தியாவில் அணுசக்தி துறையில் தனியாா் நிறுவனங்களுக்கு இருந்த 60 ஆண்டுகால தடையை நீக்கும் வகையில், ‘சாந்தி’ மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திருத்தம், தனியாா் நிறுவனங்கள் நேரடியாக அணுமின் நிலையங்களை அமைக்கவும், சிறிய அளவிலான அணு உலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் வழிவகை செய்கிறது.