தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

அணுசக்தித் துறையில் அதானி குழுமம் : புதிய நிறுவனம் தொடக்கம்

அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நோக்கில், ‘அதானி அட்டாமிக் எனா்ஜி’ எனும் புதிய துணை நிறுவனத்தை அதானி பவா் நிறுவனம் தொடங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 8:59 pm

அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நோக்கில், ‘அதானி அட்டாமிக் எனா்ஜி’ எனும் புதிய துணை நிறுவனத்தை அதானி பவா் நிறுவனம் தொடங்கியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியாா் மின் உற்பத்தி நிறுவனமான அதானி பவா், அணுசக்தி சாா்ந்த மின் உற்பத்தி, விநியோகம் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக இந்தத் துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

ரூ.5 லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளையும் அதானி பவா் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது.

இந்தியாவில் அணுசக்தி துறையில் தனியாா் நிறுவனங்களுக்கு இருந்த 60 ஆண்டுகால தடையை நீக்கும் வகையில், ‘சாந்தி’ மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திருத்தம், தனியாா் நிறுவனங்கள் நேரடியாக அணுமின் நிலையங்களை அமைக்கவும், சிறிய அளவிலான அணு உலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் வழிவகை செய்கிறது.