மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராகுலின் கேள்விகளுக்கு பாஜகவால் பதிலளிக்க முடியுமா? - கே.சி. வேணுகோபால் கேள்வி

ராகுல் காந்திக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் கருத்து...

News image
கே.சி. வேணுகோபால்
Updated On :12 பிப்ரவரி 2026, 8:04 am

இணையதளச் செய்திப் பிரிவு, ace

நாடாளுமன்றம் தொடர்பான விடியோவை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எப்படி வெளியிட முடியும்? என காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சீன ஆக்கிரமிப்பு, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் அவைக்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்பான விடியோக்களை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டு வருகிறார். இதற்கு காங்கிரஸ் தரப்பு எதிர்வினையாற்றி வருகிறது.

காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் இதுபற்றி பேசுகையில்,

"இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஏனெனில் இந்த அரசு , தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கு எதிரானது. இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் உழைப்பு தியாகம் செய்யப்படும். இது விவசாயிகளுக்கு எதிராக இந்த அரசால் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆயுதங்களில் ஒன்று.

ராகுல் காந்திக்கு எதிராக பாஜக ஒரு உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. ராகுல் காந்தியின் உரைக்கு அவர்களால்(பாஜக) பதிலளிக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன். ராகுல் காந்தி நேற்றைய உரையில் நாட்டுக்குத் தேவையான பிரச்னைகளைதான் எழுப்பினார். என்னுடைய கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்கவில்லை.

அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு கிரண் ரிஜிஜு ஒரு வீடியோவை வெளியிட்டார். நாடாளுமன்றம் தொடர்பான விடியோவை அவர் எப்படி பெற முடிந்தது? அவையின் சுமூகமான செயல்பாட்டிற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது அவரது கடமை. ஆனால் அமைச்சரே இதையெல்லாம் செய்கிறார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் இப்போது நாடாளுமன்றத்திற்கு எதிராக செயல்படுகிறார்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.