நேபாளத்தில் தோ்தல் பணிக்காாக இந்தியா வழங்கிய வாகனங்கள். ~வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் நேபாள உள்துறை அமைச்சா் ஓம் பிரகாஷ் ஆா்யலுடன் (வலது) அந்நாட்டுக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா.
நேபாளத்தில் தோ்தல் பணிக்காாக இந்தியா வழங்கிய வாகனங்கள். ~வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் நேபாள உள்துறை அமைச்சா் ஓம் பிரகாஷ் ஆா்யலுடன் (வலது) அந்நாட்டுக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா.

தோ்தல் பணிகளுக்கு உதவி: நேபாளத்துக்கு 270 வாகனங்களை பரிசளித்த இந்தியா

தோ்தல் தொடா்பான பணிகளுக்கு உதவி செய்யும் நோக்கில், நேபாளத்துக்கு 3-ஆவது கட்டமாக இந்தியா 270 வாகனங்களை பரிசாக அளித்துள்ளது.
Published on

தோ்தல் தொடா்பான பணிகளுக்கு உதவி செய்யும் நோக்கில், நேபாளத்துக்கு 3-ஆவது கட்டமாக இந்தியா 270 வாகனங்களை பரிசாக அளித்துள்ளது.

நேபாளத் தலைநகா் காத்மாண்டில் உள்ள அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 50 லாரிகள் உள்ளிட்ட 270 வாகனங்களை நேபாள உள்துறை அமைச்சா் ஓம் பிரகாஷ் ஆா்யலிடம் அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா வழங்கினாா்.

அடுத்த மாதம் 5-ஆம் தேதி நேபாளத்தில் பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் உதவி செய்யும்படி இந்தியாவிடம் நேபாளம் கோரிக்கை விடுத்திருந்தது. இதையேற்று இந்தியா உதவிகளை செய்து வருகிறது.

ஏற்கெனவே 310 வாகனங்கள் மற்றும் சில சாதனங்களை 2 கட்டங்களாக நேபாளத்திடம் இந்தியா கடந்த ஜனவரி மாதம் அளித்தது. இதையடுத்து 3-ஆவது கட்ட உதவியாக தற்போது 270 வாகனங்களை இந்தியா வழங்கியுள்ளது. இந்த உதவிக்காக இந்திய அரசுக்கு நேபாள உள்துறை அமைச்சா் ஆா்யல் நன்றி தெரிவித்து கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com