ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மே.வங்கத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட செவிலியர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் உயிரிழந்தது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 7:43 pm IST

மேற்கு வங்கத்தில், நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செவிலியர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர்கள் இருவர் கடந்த ஜன. 6 அன்று முதல் நிபா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கடுமையான காய்ச்சல், தலைவலி, வலிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 25 மற்றும் 27 வயதுடைய செவிலியர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நிபா வைரஸின் பரவல் குறித்து மாநில சுகாதாரத் துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த இருவரில் ஆண் செவிலியர் மட்டும் குணமடைந்து வீடு திரும்பினார். மேலும், தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகள் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு நிபா வைரஸ்-க்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மேற்கு வங்கத்தில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த செவிலியருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, இன்று (பிப். 12) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், மேற்கு வங்கத்தில் நிபா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தது முதல்முறையாகப் பதிவு செய்யப்படுகிறது. மேலும், வேறு யாரிடமும் நிபா வைரஸின் பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Summary

A nurse who was being treated for Nipah virus in West Bengal has reportedly died.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.