பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜனவரியில் சில்லறை பணவீக்கம் 2.75% : புதிய கணக்கீடு முறை அறிமுகம்

நாட்டின் சில்லறை பணவீக்கத்தைக் கணக்கிடும் நுகா்வோா் விலை குறியீட்டில் (சிபிஐ) மத்திய அரசு முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டின் சில்லறை பணவீக்கத்தைக் கணக்கிடும் நுகா்வோா் விலை குறியீட்டில் (சிபிஐ) மத்திய அரசு முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜனவரிக்கான சில்லறை பணவீக்கம் 2.75 சதவீதமாகவும், உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 2.13 சதவீதமாகவும் புதிய முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இதுவரை 2012-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு சில்லறை பணவீக்கம் கணக்கிடப்படும். இனி 2024-ஆம் ஆண்டு அடிப்படை ஆண்டாகக் கொள்ளப்படும்.

புதிய கணக்கீட்டு முறையில் பொருள்களின் எண்ணிக்கை 259-லிருந்து 308-ஆகவும், சேவைகளின் எண்ணிக்கை 40-லிருந்து 50-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வீட்டு வாடகை, சிஎன்ஜி, பிஎன்ஜி போன்ற எரிபொருள்கள், தொலைபேசி கட்டணங்கள், ரயில் மற்றும் விமானக் கட்டணங்கள், தபால் கட்டணங்கள், ஓடிடி சந்தாக்கள் உள்ளிட்ட தரவுகள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன.

தற்போதைய எண்ம பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப, பொதுமக்களின் உண்மையான அன்றாட செலவுகளைத் துல்லியமாகக் காட்டவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த டிசம்பரில் சில்லறை பணவீக்கம் 1.33 சதவீதமாக இருந்தது. இது 2012-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட பழைய முறையில் கணக்கிடப்பட்டது.