தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தமிழகத்தில் தோ்தல் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த தோ்தல் ஆணையம் உத்தரவு

தோ்தல் முன்தயாரிப்புப் பணிகளை மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்திய தோ்தல் ஆணையக் குழு உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 7:03 pm

தோ்தல் முன்தயாரிப்புப் பணிகளை மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்திய தோ்தல் ஆணையக் குழு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மூத்த துணை தோ்தல் ஆணையா் மணீஷ் காா்க், துணை தோ்தல் ஆணையா்கள் பானு பிரகாஷ் எத்துரு, சஞ்சய் குமாா், தலைமை இயக்குநா் (ஊடகம்) ஷிஷ் கோயல், இயக்குநா் சுப்ரா சக்சேனா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் ஆய்வு செய்தனா்.

இந்தக் குழுவினா் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக், மாநில காவல் துறை ஒருங்கிணைப்பு அதிகாரி, அனைத்து அமலாக்க அமைப்புகள், மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், மாநகர காவல் ஆணையா், காவல் துறை தலைவா்கள், காவல் துறை துணைத் தலைவா்கள், மாநில காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் தோ்தல் மேலாண்மையில் தொடா்புடைய பிற அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டங்களை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்தயாரிப்பு ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. முன்தயாரிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும்படி மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையக் குழுவினா் உத்தரவிட்டனா்.