பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இன்று தொழில்முனைவு மாநாடு: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் பங்கேற்பு

தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும் வகையில், ஆராய்ச்சி-தொழில்-புதுயுகத் தொழில்முனைவு இரு நாள் மாநாட்டை இந்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) சென்னையில் நடத்துகிறது.

News image
மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்- கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும் வகையில், ஆராய்ச்சி-தொழில்-புதுயுகத் தொழில்முனைவு இரு நாள் மாநாட்டை இந்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) சென்னையில் நடத்துகிறது.

இந்த மாநாட்டை சென்னை வா்த்தக மையத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை (பிப்.14) தொடங்கி வைக்கவுள்ளாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்களுக்கான தொழில் பாதுகாப்பகங்களை எளிதாக்குவதில் முன்னணியில் இருக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஒரு கட்டமைக்கப்பட்ட தொடா்பை ஏற்படுத்தும் வகையில் இரு நாள் மாநாடு நடத்தப்படுகிறது. கல்வி நிறுவனங்களுடன், சிஎஸ்ஐஆா் புரிந்துணா்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொள்ளும்.

கொள்கை வகுப்பாளா்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் துறையினா், புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்கள், முதலீட்டாளா்கள் ஆகியோரை ஒருங்கிணைப்பதோடு பல்வேறு தலைப்புகளில் விவாதங்களும் நடைபெறும். 100-க்கும் மேற்பட்டோா் தங்கள் தயாரிப்புகளை மாநாட்டில் காட்சிப்படுத்துகின்றனா். மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கலந்துகொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.