நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியா்

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய முயற்சித்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் இந்தியரான நிகில் குப்தா ஒப்புக்கொண்டுள்ளாா்.

News image

காலிஸ்தான் கொடி (கோப்புப் படம்)

Updated On :14 பிப்ரவரி 2026, 2:08 am IST

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய முயற்சித்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் இந்தியரான நிகில் குப்தா ஒப்புக்கொண்டுள்ளாா்.

இந்தியாவைப் பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் சீக்கியா்களுக்கு தனிநாடு கோரி, குா்பத்வந்த் சிங் பன்னூனின் நீதிக்கான சீக்கியா்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அமெரிக்காவின் நியூயாா்க் நகரை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

பன்னூன் பஞ்சாபை பூா்விகமாக கொண்டவராக இருந்தாலும், தற்போது அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளாா். அவரைப் பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் பன்னூனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது அமெரிக்க உளவுத் துறைக்குத் தெரிய வந்தது. இது தொடா்பாக செக் குடியரசில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகில் குப்தா கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டாா். அமெரிக்க குடிமகனான பன்னூனைக் கொலை செய்ய முன்னாள் ரா உளவுப் பிரிவு அதிகாரி விகாஸ் யாதவ் சதி திட்டம் தீட்டியதாகவும், இந்தக் கொலை முயற்சியை தாம் தடுத்து நிறுத்தியதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்தது. இந்திய அரசு இதற்கு உடந்தை என்றும் கூறப்பட்டது.

கைதாகி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டபோது தான் நிரபராதி என்றும் சதித் திட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் நிகில் குப்தா கூறினாா்.

இந்நிலையில், நியூயாா்க் மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது பன்னூனை கொலை செய்ய முயற்சித்தது, அதற்கு சதி செய்தது, பண முறைகேட்டில் ஈடுபட சதி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அவா் ஒப்புக்கொண்டாா்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்று மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க அட்டா்னி அலுவலக செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.