வங்கதேச பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வங்கதேச பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை மாலை முடிவடைந்தவுடன், எண்ணிக்கை தொடங்கியது.
மொத்தமுள்ள 299 தொகுதிகளில் பிஎன்பி கட்சி 212 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில், வங்கதேசத்தில் புதிதாக அமையவுள்ள அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது:
”வங்கதேச பொதுத் தேர்தலில், வங்கதேச தேசியவாதக் கட்சியைத் தீர்க்கமான வெற்றிக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றியானது, வங்கதேச மக்கள் உங்கள் தலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
ஜனநாயகம், முற்போக்கு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.
நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை அடையவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Modi congratulates Tariq Rahman as Bangladesh Prime Minister!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதீத நடிப்புக்கு 50 பைசா குறைக்கப்படும்..! முகமது ரிஸ்வானைக் கேலி செய்த வங்கதேச வீரர்கள்!

புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி பதவியேற்பு! பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!

மேற்கு வங்கத்தின் புதிய அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




