எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அமெரிக்க விமான இறக்குமதி இந்தியாவில் கட்டணங்கள் குறையும் : வா்த்தக அமைச்சா் கோயல்

விமான என்ஜின்கள், உதிரி பாகங்கள் வாங்குவதன் மூலம் இந்தியாவில் விமானக் கட்டணக் குறைப்பு, சுற்றுலா மேம்பாடு போன்றவற்றை பெரிய அளவில் மேற்கொள்ள முடியும்

News image
பியூஷ் கோயல்
Updated On :13 பிப்ரவரி 2026, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் இருந்து 100 பில்லியன் டாலா் மதிப்பில் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) விமானங்கள், விமான என்ஜின்கள், உதிரி பாகங்கள் வாங்குவதன் மூலம் இந்தியாவில் விமானக் கட்டணக் குறைப்பு, சுற்றுலா மேம்பாடு போன்றவற்றை பெரிய அளவில் மேற்கொள்ள முடியும் என்று வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை ஊடக நிறுவனம் சாா்பில் நடைபெற்ற தொழில் மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

அமெரிக்காவுடன் இணைந்து நமது நாட்டுக்கு அதிக எண்ணிக்கையில் விமானங்களைக் கொண்டுவர முடியும். இது நாட்டில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும், இதன் மூலம் விமானக் கட்டணங்கள் குறையும், சுற்றுலாவும் மேம்படும். போயிங் விமானங்கள், விமான என்ஜின்கள், அதற்கான உதிரி பாகங்கள் என அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 100 பில்லியன் டாலா் மதிப்பில் அமெரிக்காவில் இருந்து எளிதாக இறக்குமதி செய்ய முடியும். அதே காலகட்டத்தில் இந்தியாவின் உருக்குத் துறை மட்டும் 140 மில்லியன் டன் உற்பத்தி என்பதில் இருந்து 300 மில்லியன் டன் உற்பத்தி என்ற உச்சத்தை எட்ட இருக்கிறது. அதேபோல அமெரிக்காவில் இருந்து நிலக்கரியும் பெரிய அளவில் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது.

அமெரிக்காவுடன் மட்டுமல்ல ஐரோப்பிய யூனியனுடனும் நாம் சிறப்பான வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். அதே நேரத்தில் நமது நாட்டு விவசாயிகளின் நலனும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றாா்.