திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வாகனங்கள் மீது இடிந்து விழுந்த மெட்ரோ கட்டுமானம்! ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

சாலையில் சென்ற வாகனங்கள் மீது மெட்ரோ மேம்பால கட்டுமானம் இடிந்து விழுந்தது! ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

News image
- PTI
Updated On :14 பிப்ரவரி 2026, 4:52 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின்போது பாலத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

மும்பையில் எல்.பி.எஸ். சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், ஜாண்சன் & ஜாண்சன் ஆலை அருகே சனிக்கிழமை(பிப். 14) பகல் 12.15 மணியளவில் மெட்ரோ மேம்பால கட்டுமானத்தின் ஸ்லாப் பாரம் தாளாமல் இடிந்து கீழே சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், அவ்வழியாகச் சாலையில் சென்ற ஆட்டோ ரிக்ஷா ஒன்றும் கார் ஒன்றும் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்தன. அதில், ஆட்டோவில் இருந்த ராம்தன் யாதவ் என்ற பயணி உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ கட்டுமானப் பணியாளர்களின் தவறே அந்தக் கட்டுமானம் இடிந்து விழக் காரணம் என்று மும்பை மெட்ரோபாலிடன் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (எம்எம்ஆர்டிஏ) மீதும் ஒப்பந்ததாரரின் அலட்சியமுமே காரணம் என்ரு அப்பகுதி எம்எல்ஏ ஆதாரத்துடன் குற்றச்சாட்டு சுமத்தினார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் அவரது குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உரிய சிகிச்சையளிக்கப்படுவதுடன் மருத்துவச் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்தார்.

summary

1 dead, 3 injured as parapet segment of Metro bridge crashes; Oppn asks if lives of Mumbaikars hold no value

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.