பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அஜீத் பவார் மரணம்: விமான விபத்து விசாரணை தொடர்பாக அமித் ஷாவுக்கு ரோஹித் பவார் கடிதம்!

அஜீத் பவார் உயிரிழக்கக் காரணமாக இருந்த விமான விபத்து தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி எம்எல்ஏ ரோஹித் பவார் கடிதம் எழுதியுள்ளார்.

News image

ரோகித் பவார் - அஜீத் பவார்

Updated On :14 பிப்ரவரி 2026, 9:28 pm

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவார் கடந்த ஜனவரி 28ஆம் தேதி உயிரிழக்கக் காரணமாக இருந்த விமான விபத்து தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அந்த மாநில எம்எல்ஏ ரோஹித் பவார் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ரோஹித் பவார் சமூக வலைதளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அஜீத் பவார் உயிரிழக்கக் காரணமாக இருந்த விமான விபத்து தொடர்பான எனது கவலைகளைத் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு ஆகியோருக்கும் விமானப் போக்குவரத்து இயக்குநருக்கும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளேன்.

இந்த விமான விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர்களை கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த விவகாரத்தில் எனது கோரிக்கை அரசியல் ரீதியிலானது அல்ல. மாறாக இந்த விபத்தின் பின்னணியில் உள்ள உண்மையை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு வெளிக்கொணர வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

விமான விபத்து தொடர்பான சம்பவங்கள் மக்கள் முன் விளக்கப்பட வேண்டியது முக்கியமானது. இந்த விவகாரத்தில் எந்த சந்தேகமோ, ஊகமோ யாருக்கும் இருக்கக் கூடாது என்றார் அவர். தனது கடிதம், மின்னஞ்சல் ஆகியற்றின் புகைப்படங்களை அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

முன்னதாக, ரோஹித் பவார் கடந்த 10-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில் "அஜீத் பவார் உயிரிழக்கக் காரணமான விமான விபத்தில் சதி இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்க வாய்ப்பிருக்கிறது' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.