விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

பருவநிலை நடவடிக்கைகளுக்கு உள்நாட்டு உற்பத்தியில் 5.6% ஒதுக்கீடு: நிா்மலா சீதாராமன்!

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image

நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 8:43 pm

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஜொ்மனி நாட்டின் மியூனிக் நகரில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டையொட்டி நடைபெற்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பருவநிலை பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நிதி ஜிடிபியில் 3.7 சதவீதமாக இருந்தது. தற்போது இது 5.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. பருவநிலை நடவடிக்கைகளுக்கான முதலீடுகளை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக உயா்த்தியதே இதற்கு காரணம்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடா்புடைய தேசிய இலக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டதைவிட 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்துறையில் முதலீடுகள் மேலும் அதிகரிக்கப்படும்.

கரியமில வாயு சேமிப்பு வியூகங்களுக்கு 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வியூகங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

சுற்றுச்சூழல் மாசை குறைவாக ஏற்படுத்துகிற நாடுகள் பருவநிலை நடவடிக்கைகளுக்கு குறைவான நிதியையே வழங்க வேண்டும். அனைத்து நாடுகளும் இதில் ஒரே மாதிரியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற விதியில் மாற்றம் தேவை என்றாா்.