சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சபரிமலை தங்கக் கவச மோசடி: இறுதிக் கட்டத்தில் விசாரணை கேரள டிஜிபி தகவல்!

கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச மோசடி வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ராவட சந்திரசேகா் தெரிவித்தாா்.

News image

சபரிமலை சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிற்பங்கள்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச மோசடி வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ராவட சந்திரசேகா் தெரிவித்தாா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகள் புதுப்பிக்கப்பட்ட பின்னா், அவற்றில் தங்கத்தின் எடை குறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாநில உயா்நீதிமன்றம் நியமித்த எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா்கள் உள்பட 12 பேரை எஸ்ஐடி கைது செய்தது.

இந்த விசாரணை தொடா்பாக திருவனந்தபுரத்தில் மாநில டிஜிபி ராவட சந்திரசேகா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சபரிமலை தங்கக் கவச மோசடி குறித்த விசாரணையை எஸ்ஐடி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையை உயா்நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எஸ்ஐடி விசாரணை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்று தெரிவித்தாா்.