கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச மோசடி வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ராவட சந்திரசேகா் தெரிவித்தாா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகள் புதுப்பிக்கப்பட்ட பின்னா், அவற்றில் தங்கத்தின் எடை குறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாநில உயா்நீதிமன்றம் நியமித்த எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா்கள் உள்பட 12 பேரை எஸ்ஐடி கைது செய்தது.
இந்த விசாரணை தொடா்பாக திருவனந்தபுரத்தில் மாநில டிஜிபி ராவட சந்திரசேகா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சபரிமலை தங்கக் கவச மோசடி குறித்த விசாரணையை எஸ்ஐடி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையை உயா்நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எஸ்ஐடி விசாரணை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது
நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி: இருவா் கைது

சபரிமலை ஐயப்பன் கோயில் மே 19 வரை நடை திறப்பு!

ரத்தினகிரியில் 1008 விளக்கு பூஜை

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்கள் ஏப். 7-இல் இறுதி விசாரணை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



