கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச மோசடி வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ராவட சந்திரசேகா் தெரிவித்தாா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகள் புதுப்பிக்கப்பட்ட பின்னா், அவற்றில் தங்கத்தின் எடை குறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாநில உயா்நீதிமன்றம் நியமித்த எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா்கள் உள்பட 12 பேரை எஸ்ஐடி கைது செய்தது.
இந்த விசாரணை தொடா்பாக திருவனந்தபுரத்தில் மாநில டிஜிபி ராவட சந்திரசேகா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சபரிமலை தங்கக் கவச மோசடி குறித்த விசாரணையை எஸ்ஐடி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையை உயா்நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எஸ்ஐடி விசாரணை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு!

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் எஸ்ஐடி 8 மணி நேரம் விசாரணை

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்

சபரிமலை தங்கக் கவச வழக்கில் தற்போதைக்கு அரசு தலையிட முடியாது: தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



