தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புணே மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
85 வயதான மாநிலங்களவை உறுப்பினர் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தொடர்ச்சியான இருமல் காரணமாக, இந்த வார தொடக்கத்தில் புணேவின் பாராமதி நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து ரூபி ஹால் கிளினிக்கிற்கு அழைத்து வரப்பட்டார்.
சரத் பவார் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், குணமடைந்துவிட்டதாகவும் மருத்துவமனையின் தலைமை இருதய நோய் நிபுணர், தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் பர்வேஸ் கிராண்ட் தெரிவித்தார்.
குணமடைந்த நிலையில் சரத் பவார், இன்று வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளார். அவர் சில நாள்களுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவக் குழு அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்பிறகு அவர் படிப்படியாகத் தனது வழக்கமான பணிகளையும், பொதுப் பணிகளையும் மீண்டும் தொடங்கலாம் என்று மருத்துவர்கள் கூறினார்.
முன்னதாக, கடந்த ஜனவரி 28 அன்று தனது மருமகனும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜீத் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
NCP (SP) president Sharad Pawar, who was undergoing treatment for a chest infection at a private hospital here, will be discharged from the facility on Saturday, the hospital administration stated.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் சுநேத்ரா பவார்!

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுநேத்ரா பவார் வெற்றி!

பாராமதி தொகுதியில் வாக்களித்தார் ரோஹித் பவார்!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




