காதலர் தினத்தையொட்டி நாடு முழுவதும் பலவிதமான ரோஜாக்கள் விற்பனையாகி வரும் நிலையில் ரோஜாப் பூக்களின் விலை அதிகரித்துள்ளன. சில முக்கிய நகரங்களில் ஒற்றை ரோஜா பூவின் விலை ரூ.100 எட்டியிருக்கிறது.
சாதாரணமாக விற்பனையாகும் ரோஜா பூக்கள் ஒன்று ரூ.15 முதல் ரூ.30 வரை இன்று விற்பனையாவதாகவும், பெங்களூர் ரோஜா என்று அழைக்கப்படும் சிவப்பு வண்ண ரோஜாக்கள் இன்று பல நகரங்களில் ஒரு பூ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது.
அழகாக வடிவமைக்கப்பட்ட உறையில் சுற்றிக் கொடுக்கப்படும் ரோஜா பூக்கள் ரூ.120 வரை விற்பனையாகிறதாம்.
காதலர் தினம் மற்றும் மூகூர்த்த நாள்கள் என்பதால் ரோஜாக்களின் விலை அடுத்த வாரம் வரை உயர்ந்தே இருக்கும் என்றும் மலர் வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், காதலை சொல்பவர்களும், காதலை சொல்லிவிட்டு, பதிலுக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்குமான பண்டிகையாக இருப்பது காதலர் தினம்.
காதலர் தினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மலர்சந்தையில் ரோஜாப்பூகளின் விற்பனை கடந்த ஒரு சில நாள்களாகவே அதிகரித்து காணப்பட்டது.
கொத்தாக ஒரே கட்டில் 10 அல்லது 20 ரோஜாக்களைக் கொண்ட பூங்கொத்து போன்ற தாஜ்மஹால் ரோஜா நிறம் மற்றும் தரத்துக்கு ஏற்ப ரூ.500 ரூ.800 வரையிலும் விற்பனையாகி வருவதாகக் கூறப்படுகிறது.
அதுபோல, பிங்க் ரோஜா, ஆரஞ்சு ரோஜா, மஞ்சள் ரோஜா உள்ளிட்ட வகைகள் முறையே ரூ.400, ரூ.350 போன்ற விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்னையில் ஒரு ரோஜா பூவின் விலை ரூ.75 முதல் விற்பனையாகி வருகிறது. பல பூச்சந்தைகளில் ஆயிரக்கணக்கான பூங்கொத்துகள் விற்பனையாகியிருப்பதால், மலர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடிப் பெருக்கு: மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை உயா்வு

ஆடிப்பெருக்கு: பூக்களின் விலை கடும் உயர்வு! மல்லிகைப்பூ, கனகாம்பரம் கிலோ ரூ.1,000!
தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!

ஆடி மாதம் எதிரொலி: பூக்கள் விலை கடும் உயா்வு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



