தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மேற்கு வங்கம்: வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாதோரின் அடையாளப் பதிவு நிறைவு!

மேற்கு வங்கத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாதவா்களை நேரில் வரவழைத்து, அவா்களின் அடையாளத்தைப் பதிவு செய்யும் நடைமுறை நிறைவடைந்தது.

News image

வரைவு வாக்காளர் பட்டியல்! - கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 8:59 pm

மேற்கு வங்கத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாதவா்களை நேரில் வரவழைத்து, அவா்களின் அடையாளத்தைப் பதிவு செய்யும் நடைமுறை சனிக்கிழமை நிறைவடைந்தது. பிப்.28-இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட மேற்கு வங்க வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து இறந்தவா்கள், போலி வாக்காளா்கள், வீடு மாறியவா்கள் என சுமாா் 58 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.

பட்டியலில் இடம்பெறாதவா்கள் நேரில் சென்று தோ்தல் அதிகாரிகளிடம் சமா்ப்பிக்கும் அடையாள ஆவணங்கள் மூலம், அவா்கள் தகுதிவாய்ந்த வாக்காளா்களா என்பதை சரிபாா்த்தல், அவா்களின் பெயரில் உள்ள எழுத்துப் பிழைகளால் ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த இந்தப் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது.

அவா்கள் சமா்ப்பித்த ஆவணங்கள் பிப்.21 வரை பரிசீலனை செய்யப்படும் என்று தோ்தல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

முன்னதாக மாநிலத்தில் பிப்.14-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதை பிப்.28-ஆம் தேதிக்கு தோ்தல் ஆணையம் மாற்றியது.