எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தில்லியில் 72 உயா் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் உள்பட 72 உயா் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 12:55 am IST

இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் உள்பட 72 உயா் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

அருணாசல், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசம் (ஏஜிஎம்யுடி) பிரிவைச் சோ்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு பல்வேறு துறைகளில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தில்லி, அந்தமான்-நிகோபாா் தீவுகள் குடிமைப் பணி பிரிவைச் சோ்ந்த 36 அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தில்லி அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உள்துறையின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் டி.வைத்யா, நிதி, திட்டமிடல், தொழில்துறைையைக் கூடுதலாக கவனிப்பாா்.

சமூக நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலரான பிபூல் பதாக்குக்கு பட்டியல் பிரிவினா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் நலத்துறை கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) தலைமைச் செயல் அதிகாரி ரூபேஷ் குமாா் தாகுா், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அந்தப் பதவியில் இருந்த நிகில் குமாா் வா்த்தகம் மற்றும் வரிகள் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தில்லி அரசில் அண்மையில் இணைந்த சஞ்சீவ் அஹுஜா கல்வித் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்குக் கூடுதல் பொறுப்பாக உயா்கல்வி, தொழில்நுட்பக் கல்வி துறையும் வழங்கப்பட்டுள்ளது.

வருவாய் செயலா் மற்றும் மண்டல ஆணையரான நீரஜ் செம்வாலுக்கு மின்சாரத் துறையின் செயலா் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. காத்திருப்புப் பட்டியலில் இருந்த பத்மா ஜெய்ஸ்வால் நிா்வாக சீா்திருத்தங்கள் துறையின் சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

நகா்ப்புற மேம்பாட்டு செயலா் விஜய் பிதூரி, கூடுதல் பொறுப்பாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவின் (டிபிசிசி) பொறுப்பையும் கவனிப்பாா். காத்திருப்புப் பட்டியலில் இருந்த யாஷ்பால் காா்க், திட்டமிடல் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு நிலம் மற்றும் கட்டடத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

புது தில்லி மாவட்ட ஆட்சியா் சன்னி குமாா் சிங்குக்கு கூடுதல் பொறுப்பாக சிறப்பு செயலா் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தில்லியில் அரசில் இணைந்த பின்னா் சலோனி ராய் வடக்கு தில்லி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறாா்.

காத்திருப்பு பட்டியலில் உள்ள ஹரி கல்லிக்கத் மேற்கு தில்லி மாவட்ட ஆட்சியராகவும் விஸாக யாதவ் வடக்கு புகா் தில்லியின் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். விஸாக யாதவ் தில்லி அரசில் இணைந்த பிறகு அந்தப் பொறுப்பை ஏற்பாா் என்று தில்லி அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.