செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மேற்கு வங்கம்: காலியான பயணிகள் ரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து

மேற்கு வங்கத்தில் காலியான பயணிகள் ரயிலின் பெட்டி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

News image

கோப்புப்படம்.

Updated On :15 பிப்ரவரி 2026, 11:01 am IST

மேற்கு வங்கத்தில் காலியான பயணிகள் ரயிலின் பெட்டி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கட்வா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலியான பயணிகள் ரயிலின் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அதிகாலை 4.30 மணியளவில் இரண்டாவது நடைமேடையில் நின்றிருந்த கட்வா-அஜிம்கஞ்ச் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 30 நிமிடங்களுக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள், பெட்டியில் தீப்பிடித்து எரிவதைக் கவனித்தனர். இதனால் ரயில் நடைமேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீ பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பெட்டியை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக பிரித்ததாக கிழக்கு இரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

Summary

A coach of an empty passenger train caught fire at Katwa railway station in West Bengal's Purba Bardhaman district early on Sunday, an Eastern Railway official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.