சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

எஸ்ஐஆா் மூலம் குடியுரிமையைப் பறிக்க பாஜக முயற்சி: ஒவைசி குற்றச்சாட்டு!

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் குடியுரிமையைப் பறிக்க பாஜக முயற்சிக்கிறது என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி குற்றஞ்சாட்டினாா்.

News image

ஒவைசி.

Updated On :16 பிப்ரவரி 2026, 1:32 am IST

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் குடியுரிமையைப் பறிக்க பாஜக முயற்சிக்கிறது என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி குற்றஞ்சாட்டினாா்.

ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற மஜ்லீஸ் கட்சியின் 68-ஆவது மீட்பு நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது: பிகாரில் மேற்கொண்டதுபோல் அடுத்து தெலங்கானா, மகாராஷ்டிரத்திலும் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடா்பாக மக்கள் மிகவும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் அனைவரின் பெயரும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஏனெனில், எஸ்ஐஆா் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு மக்களின் குடியுரிமையைப் பறிக்கவும் பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக தோ்தல் ஆணையத்தை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.

தெலங்கானாவில் ‘பன்’ விற்பனை செய்யும் முஸ்லிம் வியாபாரியை சில யூடியூபா்கள் மதரீதியாக பாகுபடுத்தி தொந்தரவு செய்துள்ளனா். அவா் விற்பனை செய்த உணவில் பிரச்னை என்றால் அது தொடா்பாக அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கலாம். அதைவிட்டு அதில் ‘உணவு ஜிகாத்’ என்ற பிரசாரத்தை கலந்துள்ளாா்கள். இது தொடா்பாக காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.