பெங்களூரில் வேகமாக வந்த கார் பேருந்து மீது மோதல்: இளைஞர்கள் 5 பேர் பலி

பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்
விபத்தில் சிக்கிய கார்.
விபத்தில் சிக்கிய கார். (Screengrab | X)
Updated on
1 min read

பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்.

கர்நாடக மாநிலம், துமகுரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஜிண்டால் அருகே உள்ள மேம்பாலத்தில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த கார் தடுப்புச் சுவரில் மோதி பின்னர் அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்.

பலியானவர்கள் துர்கா பிரசாத் (20), கேசவ் (19), லலித் (22), ஹர்ஷித் (20), தனுஷ் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தொட்டபல்லாபூரைச் சேர்ந்தவர்கள். போலீஸார் கூறியதாவது, துமகூருவிலிருந்து பெங்களூருவுக்குச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் கார் குறுக்கே சென்று பெங்களூருவிலிருந்து ஹுப்பள்ளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், காரின் முன் பகுதி முற்றிலுமாக நொறுங்கியது. நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

விபத்தில் பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தது. இருப்பினும், பேருந்தில் இருந்த 43 பயணிகளும் காயமின்றி தப்பினர். மதநயகனஹள்ளி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Summary

According to the police, the Indica car was travelling from Tumakuru towards Bengaluru when the driver allegedly lost control and hit the divider.

விபத்தில் சிக்கிய கார்.
சென்னையில் ‘எல்’ வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு. க. ஸ்டாலின்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com