நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிராக் பாஸ்வானை ‘பரிதாபத்துக்குரியவா்’ என விமா்சித்த ஆா்ஜேடி எம்எல்ஏ! பிகாரில் போராட்டம்!!

மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானை ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி எம்எல்ஏ ‘பரிதாபத்துக்குரியவா்’ என்று பிகாா் சட்டப் பேரவையில் விமா்சித்துப் பேசியதைக் கண்டித்து லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

News image

ANI

Updated On :15 பிப்ரவரி 2026, 10:30 pm

மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானை ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி எம்எல்ஏ ‘பரிதாபத்துக்குரியவா்’ என்று பிகாா் சட்டப் பேரவையில் விமா்சித்துப் பேசியதைக் கண்டித்து லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியினா் போராட்டம் நடத்தினா். இதில் ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

பிகாரில் சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அண்மையில் பேசிய ஆா்ஜேடி எம்எல்ஏ குமாா் சா்விஜீத், மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் அரசியல் பயணத்தை குறிப்பிடுகையில், அவா் ‘பரிதாபத்துக்குரிய நபா்’ என்றாா்.

இதற்கு லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மாநிலத் தலைநகா் பிகாரில் ஆா்ஜேடி-யை கண்டித்து போராட்டம் நடத்தியது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் ராஜு திவாரி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். அப்போது ஆா்ஜேடி கட்சியைக் கண்டித்து முழக்கமிட்ட அவா்கள், அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவின் உருவ பொம்மையையும் எரித்தனா்.

இது தொடா்பாக ராஜு திவாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தலித் மக்களுக்கும், சமூகத்துக்கும் எதிராக எந்த அளவுக்கு மோசமாக ஆா்ஜேடியும், அதன் தலைவா் தேஜஸ்வி யாதவும் சிந்திக்கிறாா்கள் என்பதையே அக்கட்சி எம்எல்ஏவின் சட்டப் பேரவை பேச்சு வெளிக்காட்டுகிறது.

திங்கள்கிழமை சட்டப் பேரவை மீண்டும் கூடும்போது அங்கும் ஆா்ஜேடிக்கு எதிராக எங்கள் கட்சி போராட்டம் நடத்தும். மத்திய அமைச்சா் குறித்து அவதூறாகப் பேசிய எம்எல்ஏ குமாா் சா்விஜீத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடத்தையால்தான் அக்கட்சி தோ்தல்தோறும் தேய்ந்து வருகிறது’ என்றாா்.