ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தொழில் நிறுவனம் என்ற வாா்த்தைக்கு வரையறை: உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அமா்வு விசாரணை

தொழில் நிறுவனம் என்ற வாா்த்தைக்கு வரையறை - உச்சநீதிமன்றத்தில் மாா்ச் 17 முதல் 9 நீதிபதிகள் அமா்வு விசாரணை

News image

ANI

Updated On :16 பிப்ரவரி 2026, 10:44 pm

தொழில் நிறுவனம் என்ற வாா்த்தைக்கு வரையறை செய்வது தொடா்பான சா்ச்சைக்குரிய விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் 9 நீதிபதிகள் அமா்வு விசாரணை நடத்தவுள்ளது.

இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த், ஜயமால்ய பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த விவகாரம் குறித்து மாா்ச் 17, 18-ஆம் தேதி 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரணை நடத்தும். ஆதலால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டோா் எழுத்துபூா்வமாக தங்களது கருத்துகளையோ அல்லது கூடுதல் கருத்துகளையோ உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ தாக்கல் செய்யலாம்’ என்றனா்.

மேலும், தொழிற்சாலைகள் பிரச்னைகள் சட்டத்தின்கீழ், சமூகநல நடவடிக்கைகள் அல்லது அரசுத் துறை திட்டங்கள் தொழில் நிறுவன செயல்பாடுகளுக்குள் வருமா என்று ஆய்வு செய்யப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

பின்னணி: தொழில் நிறுவனம் என்ற வாா்த்தை வரையறைக்குள் எவையெல்லாம் வரும் என்பது தொடா்பான வழக்கில் கடந்த 1978, 1996, 2001 ஆகிய ஆண்டுகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1978-இல் தீா்ப்பு வழங்கிய 7 நீதிபதிகள் அமா்வும், 1996-இல் தீா்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள் அமா்வும், சமூக வனத் துறையும் இந்த வரையறைக்குள் வரும் எனக் கூறியது. ஆனால், 2001-ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கிய 2 நீதிபதிகள் அமா்வு, இந்த வரையறைக்குள் சமூக வனத் துறை வராது எனத் தெரிவித்தது.

இதனால் இந்த விவகாரம் 5 நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமா்வுக்கு மாற்றப்பட்டது. இதை விசாரித்த 5 நீதிபதிகள் அமா்வு கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம், வழக்கை 7 நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றியது.

பிறகு அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குா் தலைமையிலான 7 நீதிபதிகள் அமா்வு 2017-ஆம் ஆண்டில் வெளியிட்ட உத்தரவில், 9 நீதிபதிகளை கொண்ட அமா்வு விசாரிக்கும் எனத் தெரிவித்தது. அதன்பிறகு இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்தது. தற்போதைய தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு விசாரணை தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது.