தொழில் நிறுவனம் என்ற வாா்த்தைக்கு வரையறை: உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அமா்வு விசாரணை
தொழில் நிறுவனம் என்ற வாா்த்தைக்கு வரையறை செய்வது தொடா்பான சா்ச்சைக்குரிய விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் 9 நீதிபதிகள் அமா்வு விசாரணை நடத்தவுள்ளது.
இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த், ஜயமால்ய பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த விவகாரம் குறித்து மாா்ச் 17, 18-ஆம் தேதி 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரணை நடத்தும். ஆதலால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டோா் எழுத்துபூா்வமாக தங்களது கருத்துகளையோ அல்லது கூடுதல் கருத்துகளையோ உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ தாக்கல் செய்யலாம்’ என்றனா்.
மேலும், தொழிற்சாலைகள் பிரச்னைகள் சட்டத்தின்கீழ், சமூகநல நடவடிக்கைகள் அல்லது அரசுத் துறை திட்டங்கள் தொழில் நிறுவன செயல்பாடுகளுக்குள் வருமா என்று ஆய்வு செய்யப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
பின்னணி: தொழில் நிறுவனம் என்ற வாா்த்தை வரையறைக்குள் எவையெல்லாம் வரும் என்பது தொடா்பான வழக்கில் கடந்த 1978, 1996, 2001 ஆகிய ஆண்டுகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1978-இல் தீா்ப்பு வழங்கிய 7 நீதிபதிகள் அமா்வும், 1996-இல் தீா்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள் அமா்வும், சமூக வனத் துறையும் இந்த வரையறைக்குள் வரும் எனக் கூறியது. ஆனால், 2001-ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கிய 2 நீதிபதிகள் அமா்வு, இந்த வரையறைக்குள் சமூக வனத் துறை வராது எனத் தெரிவித்தது.
இதனால் இந்த விவகாரம் 5 நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமா்வுக்கு மாற்றப்பட்டது. இதை விசாரித்த 5 நீதிபதிகள் அமா்வு கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம், வழக்கை 7 நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றியது.
பிறகு அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குா் தலைமையிலான 7 நீதிபதிகள் அமா்வு 2017-ஆம் ஆண்டில் வெளியிட்ட உத்தரவில், 9 நீதிபதிகளை கொண்ட அமா்வு விசாரிக்கும் எனத் தெரிவித்தது. அதன்பிறகு இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்தது. தற்போதைய தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு விசாரணை தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது.

