தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தரவு பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

2023-ஆம் ஆண்டின் எண்ம (டிஜிட்டல்) தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :16 பிப்ரவரி 2026, 10:35 pm

2023-ஆம் ஆண்டின் எண்ம (டிஜிட்டல்) தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

2023-ஆம் ஆண்டின் எண்ம தரவு பாதுகாப்புச் சட்டம் மூலம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தனிப்பட்ட தகவல்களைப் பொதுநலனுக்காகக்கூட வெளியிடப்படுவதைத் தடுக்கிறது.

இந்தச் சட்டத்தின் பல பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பதாக தலைமை நீதிபதி சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘தரவு பாதுகாப்புச் சட்ட விவகாரம் சிக்கலாக உள்ளது. இதில் அடிப்படை உரிமைகள், தகவல் அறியும் உரிமை மற்றும் தன்மறைப்பு (பிரைவஸி) உரிமையைச் சமநிலைப்படுத்த வேண்டியுள்ளது. இதில் உள்ள வரம்புகளை சரிசெய்து, தனிப்பட்ட தகவல் என்றால் என்ன என்பதை வரையறுக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவித்தது.

மனுக்கள் தொடா்பாக மத்திய அரசு விரிவாகப் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், அந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனா். அடுத்த விசாரணை மாா்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.