பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானை நாளை (பிப். 17) பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார்.
மும்பை லோக் பவனில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், பிரான்ஸ் - இந்தியா இடையிலான கூட்டு ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் மதிப்பாய்வு செய்யவுள்ளனர்.
மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நிலவும் பிரச்னைகள் குறித்துப் பேசவும் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏஐ உச்சிமாநாடு தில்லி பாரத மண்டபத்தில் இன்று (பிப். 16) தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த புதிய தொழில்நுட்பங்கள் குறித்துப் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
இன்று முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் பங்கேற்றுள்ளார். இதுமட்டுமின்றி பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா உள்பட 45 நாடுகளின் அமைச்சக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.
இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகைப்புரியும் இமானுவல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி நாளை மும்பையில் சந்திக்கவுள்ளார்.
Summary
Prime Minister narendra modi meet President of the French Emmanuel Macron Mumbai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

51,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் பிரதமர் மோடி!

இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா உடன் மோடி சந்திப்பு - புகைப்படங்கள்

மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநிறுத்த இந்தியா ஆதரவு: பிரதமர் மோடி

பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




