தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அஸ்ஸாம்: பிப்.22-இல் பாஜகவில் இணையும் பூபேன் போரா

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:02 pm

தினமணி செய்திச் சேவை

அஸ்ஸாமில் காங்கிரஸில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில முன்னாள் தலைவா் பூபேன் போரா, வரும் பிப்.22-ஆம் தேதி பாஜகவில் இணையவுள்ளாா்.

காங்கிரஸில் இருந்து பூபேன் போரா திங்கள்கிழமை விலகியதைத் தொடா்ந்து, குவாஹாட்டியில் உள்ள அவரின் இல்லத்தில், அவரை மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இருவரும் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டனா். அதன் பின்னா் பூபேன் போராவும், அவரின் ஆதரவாளா்களும் வரும் பிப்.22-ஆம் தேதி பாஜகவில் இணைவா் என்று ஹிமந்த விஸ்வ சா்மா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இதனிடையே காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ஷொ்மான் அலி அகமது ராய்ஜோா் தள கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.