உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

90% ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பொதுப் பிரிவினர்! மாநிலங்களவையில் தகவல்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்...

நாடாளுமன்றம் - கோப்புப்படம்

Published On :17 பிப்ரவரி 2026, 3:18 pm IST

கடந்த 5 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2,834 பணியிடங்கள் (18.6 சதவீதம்) நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக மாநிலங்களவை உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜான் பிரிட்டஸ், நாட்டிலுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் பணியிடங்களுக்கான ஒட்டுமொத்த எண்ணிக்கை, காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விளக்கம் கேட்டிருந்தார்.

இந்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக கடந்த பிப். 12 ஆம் தேதி பதிலளித்துள்ளார்.

தரவுகளின்படி, நாடு முழுவதும் ஐஏஎஸ் (6877), ஐபிஎஸ் (5099) மற்றும் ஐஎஃப்எஸ் (3193) ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 15,169 பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனவரி 1, 2025 நிலவரப்படி, 2,834 பணியிடங்கள், அதாவது 18.6 சதவீதப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

Photo: https://sansad.in

தற்போதைய நிலவரப்படி, 5577 ஐஏஎஸ், 4,594 ஐபிஎஸ் மற்றும் 2,164 ஐஎஃப்எஸ் என மொத்தம் 12,335 அதிகாரிகள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மாநில வாரியாக காலிப் பணியிடங்கள் விவரம்

மாநில வாரியாக காலிப் பணியிடங்கள் விவரம் - Photo: https://sansad.in

மேலும், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்திய குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 92% ஐஏஎஸ், 90% ஐபிஎஸ் மற்றும் 82% ஐஎஃப்எஸ் அதிகாரிகள் பொதுப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ஐஏஎஸ்

ஓபிசி - 245 (4.39%)

எஸ்சி - 135 (2.42%)

எஸ்டி - 67 (1.2%)

ஐபிஎஸ்

ஓபிசி - 255 (5.5%)

எஸ்சி - 141 (3.06%)

எஸ்டி - 71 (1.54%)

ஐஎஃப்எஸ்

ஓபிசி - 231 (10.67%)

எஸ்சி - 95 (4.39%)

எஸ்டி - 48 (2.21%

Story image

Photo: https://sansad.in

முன்னதாக, நீதிபதிகள் நியமனங்கள் குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு, உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 80% பேர் பொதுப் பிரிவினர் என்று பதிலளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

90% of IAS and IPS officers in the country are general category! Rajya Sabha Data

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.