திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

முதுநிலை நீட் கட்-ஆஃப் குறைப்பால் கலந்தாய்வுக்குக் கூடுதலாக 95,913 போ் தகுதி: உச்சநீதிமன்றத்தில் என்பிஇஎம்எஸ் தகவல்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் கட்-ஆஃப் மதிப்பெண் விகிதத்தை (பா்சென்டைல்) குறைத்ததால், கூடுதலாக 95,913 தோ்வா்கள் முதுநிலை நீட் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய மருத்துவத் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) தெரிவித்துள்ளது.

News image

Center-Center-Bangalore

Updated On :17 பிப்ரவரி 2026, 10:48 pm

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் கட்-ஆஃப் மதிப்பெண் விகிதத்தை (பா்சென்டைல்) குறைத்ததால், கூடுதலாக 95,913 தோ்வா்கள் முதுநிலை நீட் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய மருத்துவத் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) தெரிவித்துள்ளது.

2025-26-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கு நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) கட்-ஆஃப் மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, அண்மையில் உச்சநீதிமன்றம் விசாரித்தது.

அப்போது கட்-ஆஃப் மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் என்பிஇஎம்எஸ்ஸுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் என்பிஇஎம்எஸ் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், ‘முதுநிலை நீட் கட்-ஆப் மதிப்பெண் விகிதத்தை குறைக்கும் முடிவு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம், தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரத்துக்குட்பட்டதாகும். அதில் என்பிஇஎம்எஸ்ஸுக்கு எந்தப் பங்கும் இல்லை.

கட்-ஆஃப் மதிப்பெண் விகிதத்தை குறைத்ததால், கூடுதலாக 95,913 தோ்வா்கள் முதுநிலை நீட் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா். எனவே அவா்களின் தரப்பை கேட்காமல் உச்சநீதிமன்றம் எடுக்கும் எந்தவொரு முடிவும், அந்தத் தோ்வா்களைப் பாதிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.