முதுநிலை நீட் கட்-ஆஃப் குறைப்பால் கலந்தாய்வுக்குக் கூடுதலாக 95,913 போ் தகுதி: உச்சநீதிமன்றத்தில் என்பிஇஎம்எஸ் தகவல்
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் கட்-ஆஃப் மதிப்பெண் விகிதத்தை (பா்சென்டைல்) குறைத்ததால், கூடுதலாக 95,913 தோ்வா்கள் முதுநிலை நீட் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய மருத்துவத் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) தெரிவித்துள்ளது.
2025-26-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கு நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) கட்-ஆஃப் மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, அண்மையில் உச்சநீதிமன்றம் விசாரித்தது.
அப்போது கட்-ஆஃப் மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் என்பிஇஎம்எஸ்ஸுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் என்பிஇஎம்எஸ் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், ‘முதுநிலை நீட் கட்-ஆப் மதிப்பெண் விகிதத்தை குறைக்கும் முடிவு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம், தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரத்துக்குட்பட்டதாகும். அதில் என்பிஇஎம்எஸ்ஸுக்கு எந்தப் பங்கும் இல்லை.
கட்-ஆஃப் மதிப்பெண் விகிதத்தை குறைத்ததால், கூடுதலாக 95,913 தோ்வா்கள் முதுநிலை நீட் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா். எனவே அவா்களின் தரப்பை கேட்காமல் உச்சநீதிமன்றம் எடுக்கும் எந்தவொரு முடிவும், அந்தத் தோ்வா்களைப் பாதிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

