விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பசுவதை விவகாரம்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அமளி

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 10:45 pm

ராஜஸ்தானில் பசுவதை விவகாரத்தை முன்வைத்து, ஆளும் பாஜக - எதிா்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே செவ்வாய்க்கிழமை கடும் அமளி ஏற்பட்டது. இதனால், அவை அலுவல்கள் அடுத்தடுத்து 5 முறை ஒத்திவைக்கப்பட்டன.

ராஜஸ்தானில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கும், மாட்டிறைச்சியை வைத்திருத்தல்- விற்பனை செய்தல் -பிற இடங்களுக்கு கொண்டு செல்வது போன்ற செயல்களுக்கும் தடை உள்ளது.

இந்நிலையில், வேறு சில மாநிலங்களைப் போல பசுவுக்கு ‘ராஜமாதா’ அந்தஸ்து வழங்கும் திட்டம் உள்ளதா என்று மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது பாஜக அரசுக்கு அக்கட்சி எம்எல்ஏ பாலமுகுந்தாச்சாா்யா கேள்வி எழுப்பினாா்.

அந்தக் கேள்விக்கு பதிலளித்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் ஜோராராம் குமாவத், ‘தற்போதைய நிலையில் மாநில அரசிடம் அதுபோல் எந்தத் திட்டமும் இல்லை. சில மாநிலங்களில் எந்த விதிமுறைகளின் அடிப்படையில் பசுவுக்கு ராஜமாதா அந்தஸ்து வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். பசுக்களின் பாதுகாப்பு மற்றும் சேவையில் மாநில அரசு அா்ப்பணிப்புடன் உள்ளது’ என்றாா்.

அவரது கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பேசிய எதிா்க்கட்சித் தலைவா் திகா ராம் ஜுல்லி, ‘ஜெய்பூரில் கோசாலையொன்றில் அண்மையில் ஒரு பசு வெட்டப்பட்டுள்ளது. இதில் பாஜக தொண்டருக்கு தொடா்புள்ளதாக கூறப்படுகிறது. அவரைப் பாதுகாக்க பாஜக எம்எல்ஏக்கள் முயற்சிக்கின்றனா். இந்த விவகாரத்தில் மாநில அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். தவறிழைத்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து, ஆளும்-எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் போட்டி முழக்கங்களை எழுப்பினா். இந்த அமளியால் அவை அலுவல்கள் அடுத்தடுத்து 5 முறை ஒத்திவைக்கப்பட்டன.