2027 தேர்தலில் கூட்டணி கிடையாது: மாயாவதி திட்டவட்டம்!

பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்து மாயாவதி விளக்கம்..
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி  (கோப்புப்படம்)
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி (கோப்புப்படம்)
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் 2027ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மற்ற கட்சிகளுடன் போட்டியிடும் எண்ணம் இல்லை எனப் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி திட்டவட்டமாகக் கூறினார்.

மக்களைத் தவறாக வழிநடத்தச் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) உதவியுடன் இதுபோன்ற போலி செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பப்படுவதாக உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டினார்.

இது முற்றிலும் தவறானது, பொய்யானது, ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட செய்தி. இந்த போலியான செய்திகள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்த வேண்டுமென்றே பரப்பப்படுகின்றன. அரசியல் தலைவர்களும் ஊடகங்களின் சில பிரிவுகளும் இதுபோன்ற ஊகங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் என்று பலமுறை அறிவித்துள்ளதாகவும், அக். 9, 2025 அன்று கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமின் நிறைவு தினத்தன்று லக்னௌவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் இது தொடர்பாக பொது அறிவிப்பை வெளியிட்டதாகவும் மாயாவதி நினைவுகூர்ந்தார்.

இந்த அறிவிப்பு குறித்து நாடு தழுவிய விவாதங்களுக்குப் பிறகும், எந்த குழப்பத்திற்கு இடமில்லை. இருப்பினும் மக்கள் சிலரும், ஊடகப் பிரிவுகளும் தவறான செய்திகளைப் பரப்பும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இது பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிரானது, மக்கள் இதில் கவனம் செலுத்தத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் பாஜக ஆகியவை குறுகிய மனநிலையைக் கொண்டுள்ளன, பி.ஆர். அம்பேத்கரின் சித்தாந்தத்தை எதிர்க்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி பற்றிய எந்தவொரு பேச்சும் தேர்தல் சுயநலத்தால் இயக்கப்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

கூட்டணி அரசியல் கடந்த காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தீங்கு மட்டுமே விளைவித்தது. எனவே, கட்சித் தொழிலாளர்கள் 2027 சட்டப்பேரவைத் தேர்தல்களில் முழு அர்ப்பணிப்புடன் தனியாகப் போட்டியிட முழுமையாக உறுதி பூண்டுள்ளதாக அவர் கூறினார்.

Summary

BSP president Mayawati on Wednesday trashed as "fake news" reports that her party would contest the 2027 Uttar Pradesh Assembly elections in alliance with other parties, asserting that it will fight the polls on its own strength.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி  (கோப்புப்படம்)
ஜார்க்கண்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர் அடித்துக் கொலை: 4 பேர் கைது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com