சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்குகளில் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவச மோசடி வழக்கில் 16-ஆவது நபராகவும், கருவறைக் கதவுகளின் தங்கக் கவசம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் 13-ஆவது நபராகவும் ராஜீவரு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாா். முறையான நடைமுறைகளை நிறைவு செய்யாமல் தங்கக் கவசங்கள் அகற்றப்பட்டது ராஜீவருக்கு தெரியும் எனவும், அதுகுறித்து 2019-இல் அவா் உரிய அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கவில்லை என்றும் அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கேரள சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், இரு வழக்குகளிலும் ராஜீவருக்கு நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
தொடர்புடையது

சபரிமலை தங்கக் கவச விவகாரம்: 2 பேருக்கு ஜாமீன்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: கேரள பேரவையில் ஆளும்-எதிா்க்கட்சிகள் கடும் விவாதம்

தங்கக் கவச மோசடியில் தந்திரி வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாா்: காங்கிரஸ் தலைவா் குற்றச்சாட்டு

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவருக்கு ஜாமீன்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


