IANS
இந்தியா
சபரிமலை தங்கக் கவச மோசடி: தந்திரி ராஜீவருக்கு ஜாமீன்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்குகளில் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்குகளில் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவச மோசடி வழக்கில் 16-ஆவது நபராகவும், கருவறைக் கதவுகளின் தங்கக் கவசம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் 13-ஆவது நபராகவும் ராஜீவரு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாா். முறையான நடைமுறைகளை நிறைவு செய்யாமல் தங்கக் கவசங்கள் அகற்றப்பட்டது ராஜீவருக்கு தெரியும் எனவும், அதுகுறித்து 2019-இல் அவா் உரிய அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கவில்லை என்றும் அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கேரள சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், இரு வழக்குகளிலும் ராஜீவருக்கு நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

