தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கடந்த 2025 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை (பிப். 19) செய்தியாளர்களுடன் பேசிய கவிதா, வரும் மே மாதம் முதல் வாரத்தில் வரும் முகூர்த்தத்தில் தான் புதிய கட்சியைத் துவங்குவதாகவும், அக்கட்சியின் பெயரில் தெலங்கானா எனும் வார்த்தை இடம்பெற்றிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தெலங்கானாவின் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் சித்திப்பேட்டை அல்லது போதன் ஆகிய தொகுதிகளிலிருந்து போட்டியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளுக்கு சித்திப்பேட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அவரது தந்தை சந்திரசேகர் ராவ் பதவி வகித்து வந்தார்.
முன்னதாக, பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கவிதா அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் அந்தக் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Telangana CM K Chandrasekhar Rao's daughter Kavitha has announced that she will soon start a new party.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்திரசேகர் ராவ் மகள் கவிதா ஏப்.25-ல் புதிய கட்சி தொடக்கம்!
ரூ. 200 கோடி பங்களா குற்றச்சாட்டு! கேரள பாஜக தலைவர் வேட்புமனு ஏற்பு!

கணக்கில் வராத ரூ. 200 கோடி பங்களா! கேரள பாஜக தலைவர் தகுதிநீக்கம் செய்யப்படுவாரா?
கேரளம்: பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் ரூ. 93 கோடி சொத்துடன் வேட்புமனு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


