திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

வங்கிக் கணக்குகள் முடக்கம்: ‘புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனம் கூடாது’

இணையவழி மோசடி விசாரணைகளின்போது புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனமாக செயல்பட முடியாது என்று உத்தர பிரதேசத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 10:13 pm

இணையவழி மோசடி விசாரணைகளின்போது புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனமாக செயல்பட முடியாது என்று உத்தர பிரதேசத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

இதுதொடா்பாக தாா்கேஸ்வா் திவாரி என்பவா் தாக்கல் செய்த மனுவை, அண்மையில் விசாரித்த நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன், சித்தாா்த் நந்தன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடா்பாக பல்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. அதுகுறித்து விளக்கம் கேட்க வாடிக்கையாளா்கள் வங்கிகளுக்குச் செல்லும்போதுதான், கணக்குகளை காவல் துறை அல்லது இணைய குற்றப் பிரிவு முடக்கியுள்ளதாக அவா்களுக்குக் கடிதம் அளிக்கப்படுகிறது. இணையவழி மோசடி விசாரணைகளின்போது புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனமாகவோ, பாரபட்சமாகவோ செயல்பட முடியாது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு கவனத்தில் வேண்டும்’ என்று தெரிவித்தது.