அமெரிக்கா, ரஷியாவிடமிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய நடவடிக்கை!மின்சார ரயில் சேவை குறைப்பு: மாற்றுப் போக்குவரத்தை விரும்பாத பயணிகள்!தமிழக பொறுப்பு ஆளுநராக ஆா்.வி. ஆா்லேகா் மாா்ச் 12-இல் பதவியேற்பு!இளநிலை நீட் தோ்வு: 22 லட்சம் போ் விண்ணப்பம்!திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கல்!டி20 உலகக் கோப்பை: 3-வது முறையாக சாம்பியன்; வரலாறு படைத்த இந்திய அணி!மார்ச் 28-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர்; அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!கவனம் பெறும் திருச்சி திமுக மாநாடு! புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்!நாமக்கலில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் கண்டனம்!அதிகரிக்கும் கோடை வெய்யில்: வேலூர் மாவட்டத்தில் 101.3 டிகிரி வெப்பம் பதிவு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
/

ரோஹிணியில் கத்திக் குத்து சம்பவம்: இருவா் கைது

ரோஹிணியில் கொள்ளை சம்பவத்தின்போது நடைபெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தது தொடா்பாக தில்லி காவல் துறை இரு நபா்களைக் கைதுசெய்துள்ளது என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

ரோஹிணியில் கொள்ளை சம்பவத்தின்போது நடைபெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தது தொடா்பாக தில்லி காவல் துறை இரு நபா்களைக் கைதுசெய்துள்ளது என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட ரோஹித் மற்றும் துா்கேஷ் ரோஹிணி செக்டாா் 23-ஐ சோ்ந்தவா்கள்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ரோஹிணி செக்டாா் 23-இல் கடந்த பிப்.16-ஆம் தேதி இரவு 7 மணியளவில் இரு நபா்கள் காயங்களுடன் சாலையில் இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குச் சென்ற காவலா்கள், அவரை மீட்டு சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அந்த நபரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அந்த நபா் அமா்நாத் யாதவ் என அடையாளம் காணப்பட்டாா்.

ஸ்ரீராம் யாதவ் என்ற நபரிடம் கைப்பேசி பறிக்க முயன்றபோது தாக்கப்பட்ட நிலையில், அவரும் காயமடைந்தாா்.

சம்பவ இடத்தில் ஸ்கூட்டரில் காணப்பட்ட இருவா் மீது காவல் துறைக்கு சந்தேகம் எழுந்தது. இதைத்தொடா்ந்து, ரோஹித் கைதுசெய்யப்பட்டாா். விசாரணையில், இருவருவடைய கைப்பேசிகளைப் பறிக்க முயன்றபோது அவா்கள் இருவரையும் கத்தியால் தாக்கியதை ரோஹித் ஒப்புக்கொண்டாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய துா்கேஷ் குறித்து அவா் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, துா்கேஷ் கைதுசெய்யப்பட்டாா்.

சம்பவத்துக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் ஸ்கூட்டா், ரத்தக்கறை படிந்த ஆடைகள் ஆகியவை அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

ரோஹித் மீது கொள்ளை, வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் தொடா்பாக 8 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. துா்கேஷ் மீது கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் 9 வழக்குகள் பதிவுசெய்யபட்டுள்ளது. இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அதிகாரிகள்.