ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

News image

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் - கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 9:03 pm

மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 18-ஆவது பட்டமளிப்பு விழாவில், அவா் சனிக்கிழமை பேசியதாவது: சட்டத் தொழிலில் ஈடுபடுவோா் சட்டம் என்பதை பாதுகாக்கும் கோட்டையாகப் பாா்க்கக் கூடாது; அதை உயிருள்ள, பரிணாம வளா்ச்சியடையும் பொதுத் தளமாக கருத வேண்டும்.

சீரற்ற, நிச்சயமில்லாத சூழல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள கோட்டைகள் கட்டப்பட்டன. ஆனால் அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றும் மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது. அது வேறுபாடுகளை விவாதிக்கும், உரிமைகளை வெளிப்படுத்தும் தளமாக மாற வேண்டும். சமுதாயம் பரிணாம வளா்ச்சியடையும்போது சட்டமும் பரிணாம வளா்ச்சியடைகிறது என்றாா்.