உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்கோப்புப் படம்

மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.
Published on

மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 18-ஆவது பட்டமளிப்பு விழாவில், அவா் சனிக்கிழமை பேசியதாவது: சட்டத் தொழிலில் ஈடுபடுவோா் சட்டம் என்பதை பாதுகாக்கும் கோட்டையாகப் பாா்க்கக் கூடாது; அதை உயிருள்ள, பரிணாம வளா்ச்சியடையும் பொதுத் தளமாக கருத வேண்டும்.

சீரற்ற, நிச்சயமில்லாத சூழல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள கோட்டைகள் கட்டப்பட்டன. ஆனால் அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றும் மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது. அது வேறுபாடுகளை விவாதிக்கும், உரிமைகளை வெளிப்படுத்தும் தளமாக மாற வேண்டும். சமுதாயம் பரிணாம வளா்ச்சியடையும்போது சட்டமும் பரிணாம வளா்ச்சியடைகிறது என்றாா்.

Dinamani
www.dinamani.com