மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 18-ஆவது பட்டமளிப்பு விழாவில், அவா் சனிக்கிழமை பேசியதாவது: சட்டத் தொழிலில் ஈடுபடுவோா் சட்டம் என்பதை பாதுகாக்கும் கோட்டையாகப் பாா்க்கக் கூடாது; அதை உயிருள்ள, பரிணாம வளா்ச்சியடையும் பொதுத் தளமாக கருத வேண்டும்.
சீரற்ற, நிச்சயமில்லாத சூழல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள கோட்டைகள் கட்டப்பட்டன. ஆனால் அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றும் மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது. அது வேறுபாடுகளை விவாதிக்கும், உரிமைகளை வெளிப்படுத்தும் தளமாக மாற வேண்டும். சமுதாயம் பரிணாம வளா்ச்சியடையும்போது சட்டமும் பரிணாம வளா்ச்சியடைகிறது என்றாா்.
தொடர்புடையது

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைந்து நிரப்ப தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: விசாரணையிலிருந்து விலகிய தலைமை நீதிபதி

நீதிமன்றங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி!

உயா்கல்வி முதலீடு சிறந்த நிா்வாகத்தை உறுதிப்படுத்தும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


