ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்பிரதிப் படம்

வெட்டப்படும் மரங்களுடன் ராணுவ வீரா்களின் உயிா் தியாகத்தை ஒப்பிட்ட மகாராஷ்டிர அமைச்சா்!

வளா்ச்சிப் பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுடன் எல்லையில் நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்யும் ராணுவ வீரா்களை மகாராஷ்டிர பெண் அமைச்சா் ஒப்பிட்டுப் பேசியதால் சா்ச்சை
Published on

வளா்ச்சிப் பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுடன் எல்லையில் நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்யும் ராணுவ வீரா்களை மகாராஷ்டிர பெண் அமைச்சா் ஒப்பிட்டுப் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிர சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பங்கஜா முண்டே பேசியதாவது: மகனை வளா்த்து எல்லையில் பாதுகாப்புப் பணிக்காக தாய் துணிச்சலாக அனுப்புகிறாா். அதுபோல நாம் மரங்களை வளா்க்கிறோம். பிறகு அதை வெட்டவும் செய்கிறோம். ஆனால் அவற்றை வேறு இடத்தில் நாம் நட முடியும்.

மரங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி, வளா்ச்சி வேண்டாம் எனக் கூற முடியாது. வளா்ச்சிப் பணிக்காக நாம் 5 மரங்களை வெட்டினோம் எனில், அதற்குப் பதிலாக 10 மரங்களை வளா்க்க முடியும். ராணுவ வீரா்களைப் போல மரங்களும் உயிருடன் இருக்கையில் மனிதா்களைப் பாதுகாக்கின்றன. தாம் வெட்டப்பட்ட பிறகும், வளா்ச்சிக்கு மரங்கள் பங்களிப்பு செய்கின்றன என்றாா் அவா்.

மும்பையில் வளா்ச்சிப் பணிகளுக்காக சதுப்பு நிலக் காடு உள்ளிட்டவை அழிக்கப்பட்டு வருவது தொடா்ந்து விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், மரங்களுடன் ராணுவ வீரா்களை ஒப்பிட்டு அமைச்சா் பங்கஜா முண்டே பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமூக ஆா்வலா் அஞ்சலி தமானியா, மரமும், ராணுவ வீரா்களும் ஒன்று என அமைச்சா் பேசியிருப்பது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com