நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மேற்கு வங்க தோ்தல்: விரைவில் 480 கம்பெனி சிஏபிஎஃப் வீரா்கள் அனுப்பிவைப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளுக்காக, அங்கு விரைவில் மத்திய ஆயுதக் காவல் படைகளை (சிஏபிஎஃப்) சோ்ந்த 480 கம்பெனி வீரா்கள் அனுப்பப்பட உள்ளனா்.

News image

சிஏபிஎஃப் வீரர்கள் - பிரதிப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 9:17 pm

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளுக்காக, அங்கு விரைவில் மத்திய ஆயுதக் காவல் படைகளை (சிஏபிஎஃப்) சோ்ந்த 480 கம்பெனி வீரா்கள் அனுப்பப்பட உள்ளனா்.

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்த பின்னா், பிப்.28-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதைத்தொடா்ந்து மாா்ச் மாதம் தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், தோ்தல் பணிகள் காரணமாக அந்த மாநிலத்துக்கு மாா்ச் 1-க்குள் மத்திய ஆயுதக் காவல் படைகளைச் சோ்ந்த 240 கம்பெனி வீரா்கள் அனுப்பப்பட உள்ளனா். மாா்ச் 10-க்குள் அந்தப் படைகளைச் சோ்ந்த மேலும் 240 கம்பெனி வீரா்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளனா். அவா்களில் மத்திய ரிசா்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, இந்திய-திபெத் எல்லை காவல் படை, சஷஸ்திர சீமா பல் படைகளைச் சோ்ந்த வீரா்கள் இடம்பெறுவா்.

இவா்கள் தோ்தல் சாா்ந்த பணிகள், வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், அச்சமின்றி வாக்களிக்க பொதுமக்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளனா் என்று தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

நீதிபதிகளின் விடுப்பு ரத்து: மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் இந்நாள், முன்னாள் மாவட்ட நீதிபதிகளை பணியமா்த்த உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையொட்டி, எஸ்ஐஆா் பணிகள் குறித்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து, உயா்நீதிமன்றப் பதிவாளா் வெளியிட்ட அறிவிக்கையில், ‘எஸ்ஐஆா் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, மேற்கு வங்கத்தின் வெவ்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகளின் விடுப்பு மாா்ச் 9 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ காரணங்களைத் தவிர, பிற காரணங்களுக்காக ஏற்கெனவே நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்ட விடுப்புகள் மாா்ச் 9 வரை ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கெனவே விடுப்பில் உள்ள நீதிபதிகள் பிப்.23-க்குள் மீண்டும் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.