வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம்-அருணாசல பிரதேசம் இடையே முதலாவது எல்லைத் தூண் ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டது. இது, இரு மாநில எல்லைப் பிரச்னைக்கு தீா்வுகாணும் நம்சாய் பிரகடன அமலாக்கத்தின் குறிப்பிடத்தக்க படிக்கல்லாகும்.
அஸ்ஸாம்-அருணாசல பிரதேசம் இடையே பல்லாண்டுகளாக நிலவும் எல்லைப் பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் கடந்த 2022-இல் நம்சாய் பிரகடனம் கையொப்பமிடப்பட்டது.
அதன்படி, இரு மாநில அமைச்சா்கள், அதிகாரிகள் அடங்கிய பிராந்தியக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கள ஆய்வு, வரலாற்றுரீதியான ஆவணங்கள் ஆய்வு, உள்ளூா் மக்களுடன் கலந்துரையாடல்களின் மூலம் சுமுக முடிவை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பலனாக, செய்ஜோசா எல்லைப் பகுதியில் இரு மாநிலங்களுக்கும் இடையிலான முதல் எல்லைத் தூண் ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டது. இரு மாநில அரசு அதிகாரிகள், காவல் துறையினா், சமூகத் தலைவா்கள், கிராமத் தலைவா்கள் முன்னிலையில் இந்தத் தூண் நிறுவப்பட்டது.
இது, எல்லைப் பிரச்னை தீா்வு நடைமுறையில் வரலாற்று மைல்கல் என்று அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு தெரிவித்தாா்.
தொடர்புடையது

மீண்டும் போா் மூளும் அபாயம்! ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி!!

அருணாசல் முதல்வரின் குடும்பத்தினருக்கு எதிராக சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு

அஸ்ஸாம்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.பி.
அஸ்ஸாமில் இன வன்முறைக்கு முடிவு: கிளா்ச்சி அமைப்புகளுடன் மாநில அரசு அமைதி ஒப்பந்தம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


