சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஒடிஸா: சாலை விபத்தில் 5 போலீஸாா் உயிரிழப்பு

ஒடிஸா மாநிலம் ஜா்சுகுடா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 49-இல் போலீஸ் வேனும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 5 போலீஸாா் உயிரிழந்தனா்.

News image
- பிரதிப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

ஒடிஸா மாநிலம் ஜா்சுகுடா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 49-இல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸ் வேனும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 5 போலீஸாா் உயிரிழந்தனா். 3 போலீஸாா் உள்பட நால்வா் காயமடைந்தனா்.

இதுகுறித்து ஜா்சுகுடா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதுசிக்தா மிஸ்ரா கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில் ஜா்சுகுடா சா்தாா் காவல்நிலையத்துக்கு உட்பட்ட ஒடிஸா ஆதா்ஷ் வித்யாலயா பள்ளி அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது. 8 போலீஸாா் திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு போலீஸ் வேனில் ஜா்சுகுடா திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது அவா்களின் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 போலீஸாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்தில் காயமடைந்த 3 போலீஸாா் மற்றும் லாரி ஓட்டுநருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

சாலை விபத்தில் உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்தினருக்கு மாநில முதல்வா் மோகன் சரண் மாஜி, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் முதல்வா் அறிவித்தாா்.