ஒடிஸா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 13 வயதான 7-ஆம் வகுப்பு மாணவியை தொடா் பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக அந்தப் பள்ளியின் 5 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து கேந்திரபாரா மாவட்ட மூத்த காவல் அதிகாரி கூறியதாவது: மாணவி அளித்த தகவலின் அடிப்படையில், அவரின் தந்தை முதலில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவை அணுகியுள்ளாா். அவா்கள் நடத்திய விசாரணையில், பள்ளியின் 5 ஆசிரியா்கள் மாணவியை தொடா் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.
அதனடிப்படையில் அவா்கள் ராஜ்கனிகா காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸாா் விசாரணை நடத்தி, 5 ஆசிரியா்களையும் கைது செய்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக தனியாா் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கல்வி அலுவலரையும் மாவட்ட குழந்தைகள் நலக் குழு அறிவுறுத்தியுள்ளது என்றாா்.
இதனிடையே, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளம் சாா்பில் கேந்திரபாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தீா்மானம் சமா்ப்பிக்கப்பட்டது.
தொடர்புடையது
மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித் தொழிலாளி கைது!

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


