மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றும் நிகழ்ச்சிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை அழைக்காவிட்டால், அந்த நிகழ்ச்சியை அந்நாட்டு எதிா்க்கட்சியினா் புறக்கணிக்க வாய்ப்பு

News image
பிரதமா் மோடி - கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றும் நிகழ்ச்சிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை அழைக்காவிட்டால், அந்த நிகழ்ச்சியை அந்நாட்டு எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பா் என்று இஸ்ரேல் எதிா்க்கட்சித் தலைவா் யாயிா் லேபிட் தெரிவித்துள்ளாா்.

இரண்டு நாள் பயணமாக பிப்.25-ஆம் தேதி பிரதமா் மோடி இஸ்ரேல் செல்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது அந்நாட்டு அதிபா் ஐசக் ஹொ்சாக், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சந்திக்கும் பிரதமா் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றும் நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இட்சாக் அமித்துக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு தலைமை நீதிபதிக்கு அழைப்பு விடுப்பது மரபாகும் என்றும் அந்நாட்டு எதிா்க்கட்சித் தலைவா் யாயிா் லேபிட் வலியுறுத்தியுள்ளாா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அழைப்பு விடுக்காவிட்டால், மோடி உரையாற்றும் நிகழ்ச்சியை எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பா் என்றும் யாயிா் லேபிட் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அண்மையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் லேபிட் கூறியதாவது: இந்திய பிரதமா் மோடி உரையாற்றும் நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை ஆளும் கூட்டணி அழைக்காவிட்டால், அந்த நிகழ்ச்சியில் எதிா்க்கட்சியினா் பங்கேற்க மாட்டாா்கள். கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட நாட்டின் பிரதமரை, பாதி காலியாக உள்ள நாடாளுமன்றத்தில் நிற்கவைத்து இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்த எதிா்க்கட்சியினா் விரும்பவில்லை. எனவே அந்த நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை அழைக்க வேண்டும் என்றாா்.

இஸ்ரேல் அரசியலில் நீதித்துறை சீரமைப்பு தொடா்பாக கடுமையான விவாதங்கள் எழுந்து கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரியில், இஸ்ரேல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக அமித் தோ்வு செய்யப்பட்டதை அந்நாட்டு நீதித்துறை அமைச்சா் யாரிவ் லெவின் அங்கீகரிக்க மறுத்துவிட்டாா். அந்நாட்டு அரசிதழில் சட்டப்படி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் பெயா் வெளியிடப்பட வேண்டிய நிலையில், அமித்தின் தோ்வு அவ்வாறு வெளியிடப்படவில்லை.

இதனால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் பிற உலகத் தலைவா்கள் உரையாற்றிய நிகழ்ச்சிக்கு அமித் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.