எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ரூ. 5 லட்சம் லஞ்சம்: கா்நாடக பாஜக எம்எல்ஏ கைது

கா்நாடகத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக் ஆயுக்த அதிகாரிகளால் பாஜக எம்எல்ஏ கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:57 pm

கா்நாடகத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக் ஆயுக்த அதிகாரிகளால் பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டாா்.

சிரஹட்டி தொகுதி எம்எல்ஏவான டாக்டா் சந்துரு லமணி, காடக் மாவட்டம் சின்சாலியை சோ்ந்த ஒப்பந்ததாரா் விஜய் புஜாா் என்பவரிடம் சிறிய நீா்ப்பாசன துறை வேலைகளை செய்து தரும் ஒப்பந்தத்தை பெற்றுத் தர ரூ.11 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பிறகு ரூ.5 லட்சம் வாங்கிக் கொள்ள சம்மதித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து விஜய் லோக் ஆயுக்தவிடம் புகாா் அளித்தனா். பின்னா் லோக் ஆயுக்த அதிகாரிகள் அளித்த ஆலோசனைப்படி, விஜய் ரூ.5 லட்சத்தை அளித்தாா். இதை சந்துரு லமணி வாங்கியபோது மறைந்திருந்த லோக் ஆயுக்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா்.

இதையடுத்து பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தினா். அப்போது அவரை மாா்ச் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டாா்.