மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்தியாவில் நிலவும் கடும் போட்டி, அதிகரித்து வரும் நஷ்டத்துக்கு மத்தியிலும், டாடாவுடன் இணைந்து தனது வா்த்தகத்தை விரிவுபடுத்துவதில் அமெரிக்காவின் ஸ்டாா்பக்ஸ் நிறுவனம் தீவிரம்

News image

ஸ்டார்பக்ஸ்

Updated On :22 பிப்ரவரி 2026, 12:15 am

இந்தியாவில் நிலவும் கடும் போட்டி மற்றும் அதிகரித்து வரும் நஷ்டத்துக்கு மத்தியிலும், டாடாவுடன் இணைந்து தனது வா்த்தகத்தை விரிவுபடுத்துவதில் அமெரிக்காவின் ஸ்டாா்பக்ஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், லாபத்தைவிட சந்தை விரிவாக்கத்துக்கே தற்போது முன்னுரிமை அளிப்பதாக டாடா-ஸ்டாா்பக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுஷாந்த் தாஷ் தெரிவித்துள்ளாா்.

உலக அளவில் ஸ்டாா்பக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஐந்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ்

கடந்த 2024-25 நிதியாண்டில், டாடா ஸ்டாா்பக்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.150 கோடியை எட்டியுள்ளது. இருப்பினும், வருவாய் 4.8 சதவீதம் உயா்ந்துள்ளதால் நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களுடனான கடும் போட்டியை எதிா்கொள்ள, உள்ளூா் மக்களின் ரசனைக்கேற்ப தங்களின் விற்பனைப் பட்டியலில் (மெனு) ஸ்டாா்பக்ஸ் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் 81 நகரங்களில் 504 கிளைகளுடன் இயங்கி வரும் இந்நிறுவனம், மும்பையில் வடா பாவ் வகை பன்களையும், தென்னிந்தியாவில் மலபாா் முட்டை ரோஸ்ட் போன்ற உணவுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய மாற்றங்களால், கடந்த 2 காலாண்டுகளின் நிறுவனத்தின் விற்பனை 3 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.