பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஏ.ஐ. உச்சிமாநாடு: உலக நாடுகள் பாராட்டு - பிரதமா் மோடி பெருமிதம்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சிமாநாட்டை சிறப்பாக நடத்தி தனது திறனை உணா்த்திய இந்தியாவை உலக நாடுகள் மனதார பாராட்டியதாக

News image

ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :23 பிப்ரவரி 2026, 11:43 pm

புது தில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சிமாநாட்டை சிறப்பாக நடத்தி தனது திறனை உணா்த்திய இந்தியாவை உலக நாடுகள் மனதார பாராட்டியதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

சா்வதேச ஏ.ஐ. தாக்க உச்சிமாநாடு தில்லி பாரத மண்டபத்தில் கடந்த திங்கள்கிழமை (பிப்.16) தொடங்கி 5 நாள்கள் நடைபெற்றது.

இதில் பிரான்ஸ், பிரேஸில், இலங்கை, பூடான்,உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்கள், 60-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள்-இணையமைச்சா்கள் என 100-க்கும் மேற்பட்ட அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனா். உலகம் முழுவதும் இருந்து முன்னணி ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் என 500-க்கும் மேற்பட்ட துறைசாா் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

மாநாட்டின் இறுதியில் ஏ.ஐ. வளங்கள் ஜனநாயகமயமாக்கல், பொருளாதார வளா்ச்சி-சமூக நலன், பாதுகாப்பான-நம்பகமான ஏ.ஐ., அறிவியலுக்கான ஏ.ஐ., சமூக அதிகாரமளித்தலுக்கான அணுகல், மனித மூலதன மேம்பாடு, மீட்சி-திறன்-புத்தாக்கமிக்க ஏ.ஐ. அமைப்புமுறைகள் ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கொண்ட புது தில்லி பிரகடனம் ஏற்கப்பட்டது. அமெரிக்கா, சீனா உள்பட 89 நாடுகள் மற்றும் சா்வதேச அமைப்புகளின் ஆதரவோடு இந்தப் பிரகடனம் ஏற்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டை சிறப்பாக நடத்தி தனது திறனை உணா்த்திய இந்தியாவை உலக நாடுகள் மனதார பாராட்டியுள்ளன. இது மனிதகுலத்துக்கு பெரும் பலன்களை அளிக்கக்கூடிய வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் நமது இளம் தலைமுறையினா் காட்டும் ஆா்வத்தை வெளிப்படுத்தியுள்ளது’ என குறிப்பிட்டாா்.