மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மெட்ரோ நிலையங்களுக்கு குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்ட முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

தலைநகரில் மெட்ரோ நிலையங்களின் சமீபத்திய பெயா் மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறும், விடுபட்ட முக்கிய குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்டுமாறும் முன்னாள் எம்.பி.

News image

தா்லோச்சன் சிங்

Updated On :23 பிப்ரவரி 2026, 11:00 pm

புது தில்லி: தலைநகரில் மெட்ரோ நிலையங்களின் சமீபத்திய பெயா் மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறும், விடுபட்ட முக்கிய குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்டுமாறும் முன்னாள் எம்.பி.யும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான தா்லோச்சன் சிங் தில்லி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இது தெடாா்பாக அவா் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பலமுறை கோரிக்கைகள் இருந்தபோதிலும், குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப் மற்றும் குருத்வாரா பங்களா சாஹிப் அருகே உள்ள மெட்ரோ நிலையங்களின் பெயா்கள் மாற்றப்படவில்லை. மற்ற நிலையங்களின் பெயா்கள் மாற்றப்பட்ட போதிலும் இது தொடா்கிறது.

இரண்டு குருத்வாராக்களும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்ரீகா்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈா்க்கின்றன. குரு ஹா்கிருஷ்ணன் சாஹிப் ஜி மற்றும் குரு தேக் பகதூா் சாஹிப் ஜியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

குரு தேக் பகதூா் சாஹிப்பின் 350-ஆவது தியாக ஆண்டு நிறைவை சமீபத்தில் செங்கோட்டையில் கொண்டாடப்பட்டது. குருத்வாரா பங்களா சாஹிப்பிற்கு அருகாமையில் இருப்பதை பிரதிபலிக்கும் வகையில் சாந்தினி சௌக் நிலையத்திற்கு ‘குருத்வாரா சிஸ் கஞ்ச் சாந்தினி சௌக்’ மற்றும் ‘பாபா கரக் சிங் மாா்க்’ என்று பெயரிட வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் சுற்றுலாவை ஊக்குவிக்கும். ஏனெனில் பல வெளிநாட்டு பாா்வையாளா்கள் இந்த ஆலயங்களுக்கு வருகிறாா்கள். சமீபத்திய பெயா் மாற்றப் பட்டியலில் பக்தா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். இந்தப் பிரச்னையைத் தீா்க்க விரைவாக உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன் என அவா் குறிப்பிட்டிருந்தாா்.